காஞ்சிபுரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தூசி கிராமத்தில் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திரை பவுர்ணமியன்று காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார். அன்று ஆதிவண் சடகோப சுவாமிகளுக்கு மாலை மரியாதை, சடாரி ஆகியவை விசேஷமாகப் பெருமாளால் அருளப்படும். இத்தலத்தின் சார்பில் காஞ்சி வரதருக்கு பதில் மரியாதை செய்யப்படும். அந்நிகழ்வை தரிசிப்போருக்கு காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலன் கிட்டுமாம்.