தஞ்சை மாவட்டம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியை ஒட்டி நடக்கும் பன்னிரண்டுநாள் விழா சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் ஒன்பதாம் நாள் காவடியுடன் பலர் நேர்ச்சையிட்டு பால்குடம் எடுப்பார்கள். குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டுதல், பெயர் சூட்டுதல், அன்னப் பிராசனம், காதணிவிழா போன்றவை நடத்தப்படுகிறது. பக்தர்கள் தங்கள் பிள்ளைகளை பிள்ளையாருக்கு நேர்ந்துவிடும் வழக்கமும் இங்கே உள்ளது.