தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு குணம் உண்டு. தன்னிடம் புதிதாக சீடராக சேர வருபவர்களுக்கு, அவர் ஒரு பரீட்சை வைப்பார். தெளிந்த நீருள்ள ஒரு குளத்தைக் காட்டி, இதனுள் நீ என்ன பார்க்கிறாய், சொல்? என்பார். இதை பல காலமாக கவனித்த மூத்த சீடன் ஒருவன்,ஐயா! புதியவர்களிடம் நீங்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? என்றான். அதற்கு சாக்ரடீஸ், எனது இந்த கேள்விக்கு, புதியவர்கள் இரண்டு விதமான பதிலைச் சொல்கிறார்கள். சிலர், என் பிம்பம் குளத்து நீரில் தெளிவாகத் தெரிகிறது என்பார்கள். சிலர் குளத்துக்குள் மீன்கள் அழகாக நீந்துகின்றன. அடியில் பலவித செடிகள், வண்ணப்பூக்கள் முளைத்துஉள்ளன என்கிறார்கள். இதில் முதல் தரப்பினர், சுயநலவாதிகள், தங்களைப் பற்றியே சிந்திப்பவர்கள். இவர்கள் தான் என்ற அகங்கார சிந்தனை உள்ளவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த பயனுமிருக்காது என முடிவெடுக்கிறேன். எனவே குளத்துக்குள் இருக்கும் மற்ற விஷயங்களைக் கவனிப்பவர்களையே என் சீடனாக ஏற்கிறேன், என்றார். அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறனுக்கானவைகளையும் நோக்குவானாக, என்கிறது பைபிள்.