அறிமுகம் இல்லாதவர்கள் மரணம் அடைந்தால் கூட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனால் மரணித்தவரின் குடும்பத்திற்கும், கலந்து கொள்பவரின் குடும்பத்திற்கும் இடையே புதிய உறவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் சண்டை வரும்போது, நீ செத்தால் கூட உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என கோபத்தில் சொல்வார்கள். சொன்னபடியே வரவும் மாட்டார்கள். இதனால், இரு குடும்பங்களுக்கும் இடையே பகை தான் வளரும். அப்படி கோபத்தில் சொன்னவர்கள் கூட, தன்னால் வெறுக்கப் பட்டவர் மரணமடைந்தால் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். அப்போது இரு குடும்பத்திற்கும் இடையே உள்ள பழைய பகை மறந்து போகும்.இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பாதியில் திரும்பக்கூடாது. உடல் அடக்கம் செய்யப்படும் வரை இருக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவருக்கு, ஒரு மடங்கு நன்மையும், ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை காத்திருந்து வருபவருக்கு இரண்டு மடங்கு நன்மையும் கணக்கில் எழுதப்படும் என நபிகள் சொல்கிறார்.
பொன்மொழிகள் * சிறிய தந்தை(தந்தையுடன் பிறந்தவர்), சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் பெற்ற தாய், தந்தைக்கு நிகரானவர்கள். * குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யக்கூடிய நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமாக இருக்கும். * வட்டி எவ்வளவு தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்ணச்செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். *வயது வந்த பெண் மக்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நன்மையான செயல்களைச் செய்வதிலும் விரைந்து கொள்ளுங்கள். * உங்களுக்கிடையே ஏற்படும் சண்டை,சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்வதில் விரைந்து கொள்ளுங்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் முந்திக் கொள்ளுங்கள்.