பதிவு செய்த நாள்
23
மே
2017
12:05
கோபி: பாரியூர், பவானியில் மழை வேண்டி, நேற்று சிறப்பு பூஜை, யாகம் நடந்தது.கோபி அருகே, பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி, நேற்று யாகம் நடந்தது. பின் கழுத்தளவு புனித நீரில், நந்தி சிலைக்கு சிறப்பு வருண பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள், ஞானசம்பந்தரின் மழை பதிகங்கள் பாடி, சிறப்பு பூஜை செய்தனர். இதேபோல் பச்சமலை முருகன் கோவிலில், நந்திகேஸ்வருக்கு, கழுத்தளவு புனித நீரில், பூஜை செய்ய தொட்டி அமைக்கப்பட்டது. மரகதீஸ்வரருக்கு ருத்ரமகா அபி?ஷகம், மழை வேண்டி தேவார திருவாசகம் பாடினர்.
* இதேபோல் மழை வேண்டி, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், வருண ஜெபம் நடந்தது. கோவில் வளாகத்தில், காலை, 7:00 மணியளவில், கோவில் சிவாச்சாரியார்கள், யாகம் தொடங்கினர். யாகம் முடிந்த பின், கோவில் முன் உள்ள, நந்தியம் பெருமானுக்கு, இரண்டு அடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை, கைலாசநாதர் கோவிலில், மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. இதில் நந்தியம் பெருமானை தண்ணீரில் மூழ்க வைத்து, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வருண மந்திரம் உச்சரித்தனர்.