சிருங்கேரி ஸ்ரீ சசாரதா பீடாதிபதிக்கு நெல்லையில் கோலாகல வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2017 11:05
திருநெல்வேலி: நெல்லைக்கு நேற்று வருகை தந்த சிருங்கேரி சாரதா பீடாதிபதி, மற்றும் விதுரசேகர பாரதி சன்னிதானம்ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் விதுரசேகர பாரதி சன்னிதானம்ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ஆலய சுற்றுப்பயணத்திற்கு பிறகு நேற்று பிற்பகலில்கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தனர். மாலை 5 மணியளவில் மாவட்டத்தின் எல்லையானகங்கைகொண்டானில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை தியாகராஜநகர் விக்னவிநாயகர் ஆலயத்தில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. யானை, குதிரை முன்செல்ல, ராஜமேளம், சென்டைமேளம் முழங்க விதுர சேகர பாரதிசன்னிதானம் அன்ன வாகனத்தில் அழைத்துசென்றனர்.
தொடர்ந்து சாரதா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில்சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிருங்கேரி ஸ்ரீ சசாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சன்னிதானம் உபன்யாசம் வழங்கினார். வரும் 27ம் தேதி வரையிலும் நெல்லையப்பர் கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில், ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு செசல்கிறார். ஜூன் முதல் தேதி காலையில் நடக்க உள்ள கங்கைகொண்டான் ஆனந்தவல்லி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கிறார்.