பழநி: பழநிமலைக்கோயிலில் சித்தர் போகரின் ஜெயந்திவிழாவை, முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி முருகன் நவபாஷான சிலையை வடிவமைத்தவர் சித்தர் போகர். இவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நேற்று அவரது ஜெயந்திவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் போகர் சன்னதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், பச்சை மரகத லிங்கத்திற்கு, பால், பழங்கள், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து, மரகலிங்கம், புவனேஸ்வரிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்குமேல் போகர் திரு உருவப்படத்துடன் கிரிவீதியில் ரதஊர்வலம் நடந்தது.