Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன ஒருமைப்பாடே வெற்றியின் ரகசியம் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மேற்கு நோக்கிய மணக்கோல சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2017
04:05

சுந்தரருக்கு அருள்புரிந்த சிவன், கடலு?ர் அருகிலுள்ள திருத்தளூரில் சிஷ்டகுருநாதேஸ்வரராக வீற்றிருக்கிறார். மணக்கோலம் கொண்ட இவர் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. தல வரலாறு:கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அவர் இத்தலத்திற்கு வந்த போது சிவனின் திருமணத்தை காண விரும்பி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியருக்கு சிவன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இங்குள்ள சிவன் மேற்கு பார்த்தும், அம்பிகை சிவலோக நாயகி வடக்கு நோக்கியும் இருக்கிறாள். மேற்கு பார்த்த சிவனுக்கு சக்தி அதிகம். அம்பிகை பொதுவாக கிழக்கு அல்லது தெற்கு நோக்கி இருப்பாள். வடக்கு நோக்கி அம்பிகையை அபூர்வமாகவே அமைப்பர். இது குபேரதிசை என்பதால் இவளை வணங்கி செல்வவளத்தைப் பெறலாம்.

குருவாக வந்த சிவன்:சுந்தரர் இத்தலத்திற்கு சென்ற போது தென்பெண்ணையாற்றில் வெள்ளம் ஓடியது. எனவே கரையில் இருந்த படியே, மறுகரையில் இருந்த சிவனை நோக்கி தேவாரம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதி வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக் கொண்டு மறு கரைக்கு சென்றனர். அங்கு சிவன் இல்லை. சுந்தரரின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். அப்போது முதியவர் அவரிடம், நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார், என்று சொல்லி விட்டு மறைந்தார். சுந்தரர் மேலே பார்த்த போது சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். முதியவர்களாக வந்தது சிவபார்வதி என்பதை அறிந்த சுந்தரர்,தனக்கு உபதேசிக்க வேண்டினார். சிவனும் குருவாக இருந்து தவநெறிகளை உபதேசம் செய்தார். இதனடிப்படையில், தவநெறி ஆளுடையார், சிஷ்டகுரு நாதேஸ்வரர் எனபெயர்கள் வந்தன. கல்வியில் சிறக்கவும், சிறந்த கல்லு?ரியில் விரும்பிய படிப்பில் சேரவும் வியாழனன்று வழிபடுகின்றனர்.

சிறப்பம்சம்: இங்கு முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். ஆதிகேசவர் தெற்கு நோக்கி இருக்கிறார். சுந்தரர் செங்கோலுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே சுந்தரருக்கு காட்சி தந்த சிவன் சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியபகவான், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். தல விருட்சமாக கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரணி உள்ளது. கோவிலுக்கு எதிரேமுதியவர் வடிவில் வந்த சிவனுக்குதடுத்தாட்கொண்ட ஈஸ்வரர் சன்னதியும், அஷ்டபுஜ காளி சன்னதியும் உள்ளது. கோவில் எதிரில் மெய்கண்டாரின் சீடரான  அருணந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar