நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி மாலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு அர்சுனன் திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 25ம் தேதி அர்சுனன் தவசு நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அரவான் படுகளம் மற்றும் கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.