பதிவு செய்த நாள்
29
மே
2017
01:05
ஓசூர்: ஓசூர் அருகே பேடரப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சீதா, ராம திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அருகே பேடரப்பள்ளி ஏரிக்கரையில், 200 ஆண்டு பழமையான வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு, 7:30 மணிக்கு, வாஸ்து பூஜை மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. நேற்று காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு தேன் அபி?ஷகம், 9:00 முதல், 11:00 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, கோவில் அர்ச்சகர் வெங்கடேசமூர்த்தி அய்யங்கார், திருமலை, திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் சுனில் பட்டாச்சாரியா ஆகியோர் தலைமையில், வேத மந்திரங்கள் முழங்க, சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பேடரப்பள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.