பதிவு செய்த நாள்
30
மே
2017
10:05
காளையார்கோவில்;காளையார்கோயில் சோமேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை நடந்தது. நேற்று காலையில் 7:00 மணிக்கு சுவாமி, -அம்பாளுக்கு சிறப்பு அபி ேஷகம் , யாக பூஜை நடந்தது. 7:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. காளீஸ்வரக்குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு அபி ேஷகம், தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்து, இரவு 8 மணிக்கு காமதேனு, வெள்ளி ரிஷபவாகனத்தில் திருவீதி உலா வந்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஏ.எல்.ஏ.ஆர். அறக்கட்டளையினர், கிராம மக்கள் பங்கேற்றனர். திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் மாலை வாஸ்துசாந்தி, விநாயகர் பூஜை நடந்தது.தொடர்ந்து வில்வமரத்திற்கு காப்புக் கட்டப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொடிமரத்திற்கும். கொடிப்படத்திற்கும் அபிேஷகம் நடந்து காப்புக்கட்டப்பட்டது. இரவில் திருத்தளிநாதர், -சிவகாமி அம்பாள் திருவீதிஉலா வந்தனர். ஜூன் 6ல் தேரோட்டம் நடக்கும்.