பதிவு செய்த நாள்
30
மே
2017
10:05
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகர் சர்வீஸ் ரோட்டையொட்டி ஸ்ரீ சாய் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகள், விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்ச காவ்யம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ஆச்சாரிய வர்ணம், யாகசாலை பிரவேசம், பாவனாபிசேஷகம், பூர்ணாஹூதி, யந்திர ஸ்தாபனம் போன்ற பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. மங்கள இசை, மண்டபாராதனை, வேதிகார்ச்சனை நடந்தது.
காலை 9:45 மணிக்கு மேல் புனித நீர் ஊற்ற விமான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின் மூவாலய கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயவிலாஸ் குடும்பத்தினர், ஸ்ரீ காங்கேயா டெக்ஸ்டைல்ஸ், கா. லெட்சுமண ஆச்சாரி சன் ஜூவல்லர்ஸ், வி.கே.எஸ். கன்ஸட்ரக் ஷன், எஸ்.வி.ஜெ., அசோசியேட்ஸ், எஸ். கல்யாணி அன்டு கோ, சிஸ்கான் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜானகி ஜூவல்லர்ஸ், சன் செல் மற்றும் பாலா மொபைல் வேர்ல்டு, விஜயா மருத்துவமனை, முத்துமணி திருமண மண்டபம், முத்துமணி புளூ மெட்டல்ஸ், சாய் டிரான்ஸ்போர்ட்ஸ், எஸ்.எம்.எஸ்., தங்கமாளிகை, ராஜ்கோ சூப்பர் மார்க்கெட்ஸ், அனுசுயா டெக்ஸ்டைல்ஸ், விஜயலட்சுமி டிரேடர்ஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்தனர்.