பதிவு செய்த நாள்
30
மே
2017
12:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் குளத்தை, சென்னையைச்சேர்ந்த உழவாரப்பணி குழுவினர், துார்வாரி சுத்தப்படுத்தினர். நாட்டின் நீர் ஆதாரமாக விளங்குவதில் குளம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குளத்தில் தண்ணீரை தேக்குவதன் மூலம், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அதற்காகவே, ஒவ்வொரு கோவில்களிலும் குளம் வெட்டப்பட்டது. தற்போது அவை , முறையான பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கின்றன. இதை மீட்கும் நடவடிக்கையில், சென்னையைச்சேர்ந்த , ‘ஜெகத்குருசே வாஸ்’ என்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதி கோவில் குளங்களை சுத்தப்படுத்தி, உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அந்த அமைப்பைச் சேர்ந்த , 60 பேர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் குளத்தை, நேற்று சுத்தம் செய்து, துார்வாரினர். இதுகுறித்து, உழவாரப்பணி குழுவைச் சேர்ந்த, கே .ராமஜெயம் கூறியதாவது: நாங்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக, குளம் துார்வாரும் பணியை செய்து வருகிறோம். இதுவரை, 120 கோவில் குளங்களை உழவாரப்பணி செய்து உள்ளோம். கோவில் குளம் பராமரிப்பின்றி, சீரழிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்தால், அதை
சுத்தம் செய்து தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இவர்கள் உதவி தேவைப்படுவோர், 99419 10390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.