விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகன் தாமரை மலர்மீது அமர்ந்து ஒரு கரத்தில் வஜ்ரம் கொண்டுள்ளார். இவரது கரத்தில் வஜ்ராயுதம் இருப்பதால் சக்தியின் அம்சமும், தாமரை மலர் மீது அமர்ந்துள்ளதால் கலைமகளின் அம்சமும் கொண்டு விளங்குகிறார். இவரை வழிபட்டால் கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளக்கலாம்.