கோயில் மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்தை கோமுக நீர் என்று போற்றுவார்கள். இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகள் விலகிவிடும் என்பது ஐதிகம். வைகாசி விசாகத் திருநாளில் கோமுகநீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொண்டு வந்து வீடு, வியாபார தலங்களில் தெளித்தால் வாஸ்து தோஷம், கண், திருஷ்டிகள் விலகும் என்பது ஐதிகம்.