எண்ணில்லாத அண்டங்கள் பரவெளியில் தாமே சுழன்றும், அவற்றுள் சிலவற்றைச் சில சுற்றியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் ஒரு வரையறைக்குப்பட்டு சஞ்சரிக்கின்றன. எங்கும் நிறைந்த அணுக்கள் ஏக தாளத்தில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. இவற்றை இவ்வாறு ஆட்டுவிப்பது எது எனத் தெரியாமல் விஞ்ஞானிகள் வியப்படைகின்றனர். இதனை உற்று நோக்குமிடத்து மனித அறிவுக்கு எட்டாத ஒரு மகத்தான சக்தி உண்டு என்பதும், அதுவே இவ்வற்புத வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறதெனவும் விளங்கும்.