காஞ்சி காமாட்சி அம்மன், தனது இச்சா மந்திரத்தால் பன்னிரெண்டு திருத்தலங்களில் காட்சி தந்து அருள்கிறாள். அவற்றுள் ஒன்று சென்னை, தம்பு செட்டி தெருவிலுள்ள காளிகாம்பாள் திருக்கோயில், இங்கு காளிகாம்பாள் கமடேஸ்வரர் சமேதராக அருள் பாலிக்கிறாள். இந்தியாவிலேயே உயரமான வெண்கல கிண்ணித் தேர் இங்குள்ளது. இதன் உயரம் 24 அடி அகலம் 11 அடி. நான்கு பெரிய சக்கரங்கள் கொண்டது. வைகாசி மாத பிரம்மோத்ஸவத்தின் கடைசி நாளன்று காளிகாம்பாள் இத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.