இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலமான சிம்லா நகரில் ஜக்குமலைப் பகுதியில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. ராமாயணக் காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த பின்னர், ஜக்கு மலையில்தான் ஓய்வு எடுத்தாராம். அதன் நினைவாக, இங்கு அனுமனுக்கு ஒரு பழைமையான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகில்தான் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலை திறந்த வெளியில் காட்சி தருகிறது.