மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சான்வேர் திருத்தலம். இங்குள்ள கோயிலில், தலைகீழாக, தலைப்பகுதி மட்டுமே தெரியும்படி எழுந்தருளியுள்ளார் அனுமன். ராம லட்சுமணரை மயில் ராவணன் பாதாள உலகத்துக்குக் கடத்திச் சென்றான். இதனை அறிந்த அனுமன். அவர்கள் இருவரையும் மீட்க, தலைகீழாக பாதாள உலகத்துக்குப் புறப்பட்ட இடம் இதுவென்று புராணம் கூறுகிறது. எனவே, இங்குள்ள அனுமன் கோயிலில் அனுமனின் முகம், தலைகீழாக உள்ளதாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த அனுமன் முகத்துக்குச் செந்தூரம் பூசி, பக்தர்கள் வழிபடுகிறார்கள்.