சிவபெருமானிடம் ஒருமுறை பார்வதி தேவி, சுவாமி நீங்கள் சமயத்தில் என்னுடன் குடும்பம் நடத்துகிறீர்கள். சில நேரம் சுடுகாட்டில் சன்னியாசி போல் தியானம் செய்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் தேவி, மனைவி, மக்கள் என்று விளங்குவது சிவ குடும்பம் இதன் மூலம் இல்லறத்தினர் வாழ, நான் ஒரு முன் மாதிரி அமைத்துக் கொடுத்துள்ளேன். சுடுகாட்டில் தியானிப்பதால், பற்றற்ற தன்மை போன்றவற்றால் துறவியருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறேன் என்றார்.