செவியைச் சிற்ப்பித்துப் பெரியோர்கள் சொல்வதன் நோக்கம்.... கடவுளின் நாமங்களைக் கேட்பது செவியே. பரகதி செய்வோருக்குத் துணை செய்து, நல்வழிப்படுத்துவது செவியேயாகும். தமிழ் வேதமாகிய தேவாரம் தொடங்கும் போதும் இச்செவியினையே முதற் கூறுவதாகி, தோடுடைய செவியன் என்று உபதேசிக்கின்றது. ஓங்கார வடிவாக விளங்குவதும் செவியே, முதன் முதலில் செவிக்கே ஆபரணஞ்சூட்டி, கர்ண பூஷணம் என்கிற வைதீகச் சடங்கைச் செய்கின்றனர்.