பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
ஓசூர்: ஓசூர் அடுத்த, கெலமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம், 17ம் நூற்றாண்டை சேர்ந்த பீரே தேவர் என்ற சிவலிங்கேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த, கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கங்காபூஜை, இரவு, 7:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் கண் திறப்பு, 9:00 மணிக்கு அமுது படைத்தல், தலைமேல் தேங்காய் உடைத்தல் நடந்தது.