வட்டி வாங்கி பிழைப்பவர்களை விபசாரம் செய்கிறவர்கள், என்கிறார் நபிகள். “நான் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கிறேன், நூறு ரூபாய்க்கு வருடத்துக்கு 5 ரூபாய் தான், என்று கூட சொல்லித் தப்பிக்க முடியாது. எவன் ஒருவன் தனக்கு கிடைத்த வட்டி வருமானத்தில் ஒரு காசுக்கு பொருள் வாங்கி சாப்பிட்டாலும் சரி... அந்தப்பாவம் 33 தடவை விபசாரம் செய்ததற்கு ஒப்பாகும், என கடுமையாக சொல்கிறார் நபிகள். வட்டி வாங்கும் தொழிலைச் செய்யும் பெண்களுக்கு இந்த வாசகம் பெரும் உறுத்தலை ஏற்படுத்தும். இதுவரை வாங்கிய வட்டியை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது தர்மம் செய்து இறைவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும்.