புதிய முயற்சியில் வெற்றி பெற ஆனி பவுர்ணமியன்று (ஜூலை 8) அம்மனுக்கு விரதமிருந்து வழிபட வேண்டும். சிவப்பு நிற மலர்கள், குறிப்பாக செண்பகப்பூக்களைச் சூட்டுவது நல்லது. அம்மன் சிலை வீட்டில் இருந்தால்சிவப்பு வஸ்திரம், முத்துமாலை அணிவிப்பது சிறப்பு. மா, பலா, வாழைப்பழம், உளுந்தம் பருப்பு சாதம் நைவேத்யம் செய்து பிரசாதத்தை ஏழைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.