திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.வைகாசி மாத பவுர்ணமி 8ம் தேதி மாலை 5:23 மணிக்கு துவங்குகிறது. மறுநாள் இரவு 7:31 மணி வரை உள்ளதால் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.