காளையார்கோயில்: காளையார்கோவில் சோமேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன்கோயில் வைகாசி விசாக விழா தேரோட்டம் நடைபெற்றது. சோமேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன்கோயில் வைகாசி விசாக விழா மே 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது.திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு அபி ேஷகம் தீபாராதனை நடைபெற்றது. 5:00மணிக்கு பெரியதேரில் சுவாமி அம்பாளும், சின்னதேரில் அம்பாள் எழுந்தருளினர். காலை 11:00 மணிக்கு பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் வலம்வந்து 12:20 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.