திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம், முருகனுக்கு திருமணம் நடைபெற்ற இத்தலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொள்வதை ஒரு வேண்டுதலாகவே பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகன் ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி ஏந்தியும் இருக்க, முருகனின் வாகனமான மயில் வித்தியாசமாக வடக்கு நோக்கியபடி நின்றிருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.