மண் (பிருந்தவனத்தலம்) காஞ்சிபுரம், திருவாரூர், (திரு+ஆர்+ஊர்; ஆர் = மண்) நீர் (அப்புத்தலம்) திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், திருச்சிராப்பள்ளி தீ (தேயுத்தலம்) திருவண்ணாமலை வளி (வாயுத்தலம்) திருக்காளத்தி வான் (ஆகாயத்தலம்) சிதம்பரம் ஆகியவை பஞ்சபூதத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. மேற்கண்ட தலங்களைத் தரிசிப்பதன் மூலம் பஞ்சப்பூதங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். பஞ்சபூதங்களின் நிலத்தைப் பாழ்படுத்துவதும், நீரை அசுத்தப்படுத்துவதும் காற்றை மாசு படுத்துவதும், ஆகாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் தெரிந்தே ஈடுபடுவது தோஷத்தில் அடங்கும். இதில் கண்ணுக்குத் தெரிந்தே செய்கிற பெரும்பாவம் நீரை அசுத்தப்படுத்துவதாகும். தேங்கிய குட்டைகளில் மலஜலம் கழிப்பதற்குக் கூட நீரை முகந்துதான் பயன்படுத்த வேண்டும் என உபநிடதங்கள் கூறியுள்ளன.