புதிதாக வடித்த சுவாமி விக்ரகங்களை நீருக்குள் போட்டு வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2017 06:06
ஆகம சாஸ்திரங்களில் புதிதாகச் செய்யப்படுகின்ற விக்ரஹங்களை, ஜலவாசம், தான்யவாசம் என்று இரண்டு வாசம் செய்துவிட்டுத்தான் உபயோகப்படுத்த வேண்டும். ஜலவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் ஜலத்தில் வைப்பது. தான்யவாசம் என்பது தானியங்களில் அந்த விக்ரஹங்களை மூடி வைப்பது. அதன் பின் பஞ்சகவ்யத்தினால் சுத்தம் செய்து, அதன்பின்னர் கும்பாபிஷேகத்திலோ பூஜைக்கோ பயன்படுத்த வேண்டும். ஆகம சாஸ்திரங்களில் அனேக காரியங்கள் நுட்பமானவை. எல்லாவற்றுக்கும் காரண, காரியங்களை விளக்க முடியாது. பொதுவாக, சாஸ்திரங்களில் எது நம் புத்திக்கும் யுக்திக்கும் புரியாதோ, தெரியாதோ அதைத்தான் சாஸ்திரங்கள் சொல்லும். சில இடங்களில் அதை முழுமையாக நம்பித்தான் ஆகவேண்டும். இந்த சமித்தை எடுத்து ஹோமம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும். இந்த பாலால் அபிஷேகம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று சொன்னால், அது எப்படி கிடைக்கும் என்று கேட்டால்...? எப்படிச் சொல்வது. நமக்கு எது புரியாதோ அதைத் தான் சாஸ்திரம் சொல்லும்.