உன்னால் சாதிக்க இயலாதது என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், எவரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டுதான் இருக்கிறார்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவை, நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர அழுவதற்காக அல்ல.
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.