*எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள். முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை. * எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். *சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் துணை நில்லுங்கள். * யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். சுயகாலில் நிற்கப் பழகுங்கள். * உலகை விட்டுச் செல்லும் போது மனிதன் அழுகிறான். *ஆனால், மகான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். *உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். *இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை. *துறவிக்கு பணத்தை வெறுக்கும் சக்திஇருக்கும். மற்றவர்கள் பணத்தால் பொம்மை போல ஆட்டி வைக்கப்படுகிறார்கள். *கஷ்டங்கள் நீடிப்பதில்லை. ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும். *துன்பம் என்பது கடவுளின் பிரசாதம். அது நம்மை நல்வழிப்படுத்தவே வழங்கப்படுகிறது. * நட்பு என்பது ஒருவருக்கொருவர் பொழுதுபோக்க அல்ல. தேவையான சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும் நட்பிற்கு இருக்கிறது. *கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம். *மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள். *ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருக்கிறார். *அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள். * மதம் பிடித்த யானை போல மனம் செயல்படுகிறது. *தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும். *கடவுளின் திருநாமத்தை தினமும் ஜெபியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள். *தெய்வ வழிபாட்டுக்கு உரிய நேரம் எதுவானாலும் மனம் ஒன்றி வணங்குவது அவசியம். ஒருநாள் கூட இதை மறக்காதீர்கள். *தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் தூய்மையாக பார்க்கிறார்கள். அவர்களின் சொல்லும், செயலும் எல்லாருக்கும் நன்மையளிக்கும். - சொல்கிறார் சாரதாதேவியார்