அல்லாஹ் தினமும் இரண்டு வானதூர்களை பூமிக்கு அனுப்புகிறான்.இவர்களின் பணி என்ன தெரியுமா? ஒருவர், செலவு செய்கின்ற தாராள மனம் கொண்டவனுக்காக கடவுளிடம், “யா அல்லாஹ்! இவர் நன்மையான செயல்களுக்காக ஏராளமாகச் செலவிடுகிறார். இவருக்கு உன் அருளைக் கொடு. இவருக்கு நல்லதொரு பிரதிபலனைத் தா,” என்று சிபாரிசு செய்வார். இன்னொருவர் கஞ்சப்பிரபுக்களைக் கண்காணிப்பார். “இறைவா! கஞ்சத்தனம் புரிவோருக்கு அழிவைக் கொடு,” என்பார். “தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்கு நீ செலவிடாவிட்டால், இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால், அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்கமாட்டான்,” என்று நாயகம் சொல்கிறார்.