லண்டனில் பக்தி பிரசங்கம் செய்யும் ஸ்பர்ஜன் என்பவர், ஒரு அனாதை விடுதி நடத்தி வந்தார். பிரசங்கத்துக்காக தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அனாதைக் குழந்தைகளை காப்பாற்றி வந்தார். ஒருமுறை பிரிஸ்டல் நகரத்துக்கு பிரசங்கிக்கச் சென்றார். அவருக்கு அப்போது 300 பவுன் தேவை இருந்தது. நினைத்தபடியே தொகையும் கிடைத்தது. மறுநாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தார். தூங்கும் போது, கனவில் தேவனின் குரல் ஒலித்தது. “அன்பரே! நீர் உமக்கு கிடைத்துள்ள தொகையை இவ்வூரில் மற்றொரு அனாதை விடுதி நடத்தும் எனது ஊழியரான ஜார்ஜ் முல்லரிடம் கொடுத்து விடு,” என்றது. அதை பிறருக்கு கொடுத்து விட்டால், தனது விடுதிக்கு என்ன செய்வதென புரியவில்லை. இருந்தாலும், தேவனின்கட்டளைக்கு கீழ்ப்படிவோரை அவர் கவனித்துக் கொள்வார் என நம்பியதால், ஜார்ஜ் முல்லரைத் தேடிச் சென்று பணத்தை ஒப்படைத்தார்.
முல்லர் ஸ்பர்ஜனிடம், “நான் இப்போது தான் இந்தப் பணத்துக்காக ஜெபித்துக் கொண்டு இருந்தேன். என் ஜெபத்தை ஆண்டவர் ஏற்றார்,” என்றார். ஸ்பர்ஜன் லண்டனுக்கு திரும்பி விட்டார். அவரது மேஜையில் ஒரு அஞ்சல் உறை இருந்தது, அதில், ஒரு நல்லவரின் கடிதமும், அத்துடன் அவர் அனாதை விடுதிக்காக அனுப்பிய 315 பவுன் பணமும் இருந்தது. கடவுள் வட்டியோடு சேர்த்து கொடுத்து விட்டார். நம்மை வருத்திக் கொண்டு, நாம் பிறருக்கு உதவினால், இறைவன் நமக்கு பல மடங்காக உதவுவார்.