ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு விசேஷம் உண்டு. வைகாசி பவுர்ணமி விசாக நட்சத்திரத்துடன் கூடிவருவது வைகாசி விசாகம். முருகனுக்கு விசாகப் பெருமான் என்ற பெயரும் உண்டு. நம்மாழ்வார் விசாகத்தில் பிறந்தவர். அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் திருவருட்பா பாடிமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவர் ஜோதி வழிபாடு, பசித்தவருக்கு அமுது படைத்தல் முதலான பல நல்ல விஷயங்களை மக்களுக்கு உணர்த்தியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வருந்திய வள்ளல் பெருமானார். வடலுரில் சத்திய ஞான சபையை ஏற்படுத்தி, அங்கே ஒரு தர்மாலையை தோற்றுவித்தார். இது நிகழ்ந்தது ஒரு வைகாசி மாதத்தில்தான். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் வைகாசி பவுர்ணமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் என்று வைகாசி பவுர்ணமியை புகழ்கிறது மணிமேகலை. சமத்துவம், சமாதானம் ஆகியவற்றைப் போதித்தவர். அகிம்சையே உயிர் என்று வாழ்ந்த அருளாளர் புத்தர் பெருமான். இவர் பிறந்தது ஒரு வைகாசி பவுர்ணமி. ஒருவர் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு, ஞானப் பேறு என்பவை மிக மிக முக்கியமானது. புத்தர் பெருமானின் வாழ்க்கையில் இம்மூன்றும் நடந்தது வைகாசி பவுர்ணமியில்.