பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
திருத்தணி: சோளீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும், 25ல் தேதி நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள், 4.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. அதாவது, கோவிலில் உள்ள ஏழு சன்னதிகளின் விமான கோபுரங்கள், கோவில் நுழைவாயில் கோபுரம் ஆகியவற்றிக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முடிந்து, வரும், 23ல் கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்குகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, 23ம் தேதி மாலை, முதல்கால யாகபூஜை நடக்கிறது. 24ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், மாலை, மூன்றாம் கால யாகபூஜையும், 25ம் தேதி, காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும், காலை, 11:00 மணிக்கு மூலவருக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலையில் உற்சவர் வீதியுலாவும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.