ஒருவரது கையில் புற்றுநோய் ஏற்பட்டது. கையைத் துண்டித்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்றார் டாக்டர். அதை உடனே செய்து விட்டார் நோயாளி. அதுபோல் கெட்ட சகவாசத்தை ஒடுக்கினால் தான், நல்லவனாக மாற முடியும். இதைத்தான், உன் வலது கண் உனக்கு இடர் உண்டாக்கினால் அதைப்பிடுங்கி எறிந்து விடு என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. நல்லவனாக வாழ வேண்டுமானால், எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைப் காத்துக் கொள். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி உதடுகளின் மாறுபாட்டை உனக்கு துாரப்படுத்து, என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. கெட்ட சகவாசம், பாவங்கள் செய்ய தூண்டுகோலாக அமைகிறது. இதில் இருந்து மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, மன அடக்கம் கொள்வதுடன், பேச்சிலும் கவனம் செலுத்த வேண்டும்.