Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப ... மண்டலகால பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு! மண்டலகால பூஜைக்கு சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டலகால பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2011
10:11

சபரிமலை : மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறந்தது. புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். இன்று கார்த்திகை 1ம் தேதி. இதற்காக, சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. கடந்த ஒரு ஆண்டு காலமாக மேல்சாந்தி பொறுப்பு வகித்த சசிநம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகளான சபரிமலை பாலமுரளி நம்பூதிரி, மாளிகைப்புறம் ஈஸ்வரன் நம்பூதிரி ஆகியோர், இருமுடி கட்டுடன் 18ம் படியேறி சன்னிதானம் வந்தனர். அவர்களுக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் சசிநம்பூதிரி ஆகியோர், பிரசாதம் கொடுத்தனர். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே சன்னிதானத்தில் முகாமிட்டிருந்த பக்தர்கள், 18ம் படியேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. 6.30 மணிவாக்கில் ஸ்ரீகோவில் முன்புறம், சபரிமலை மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி வந்தார். அவருக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜைகள் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்த பின், ஸ்ரீகோவிலுக்குள் அழைத்துச் சென்றார், இதுபோல, மாளிகைப்புறம் மேல்சாந்தியாக ஈஸ்வரன் நம்பூதிரியும் பொறுப்பேற்றார். நடைதிறப்பை ஒட்டி, கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மாலையில் நடை திறந்த போது, சன்னிதான சுற்றுப்புறம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் சபரிமலை நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கும். இதுபோல, இரவிலும் நடை அடைக்கும் நேரம் 45 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar