Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பொலிவு பெறும் பழநி கோயில் ... பொன்பத்தி கோவில்களில் தேர் திருவிழா பொன்பத்தி கோவில்களில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நூற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
13ம் நூற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
11:06

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரை கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் தொகுப்பும், சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது:
தண்டரை கிராமத்திற்கு அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், தொல்லியல் துறை பதிவு செய்யாத, இரு நடுகற்கள் உள்ளன. அதன் அருகே உடைந்து போன ஒரு நந்தி சிற்பமும், சேதமடைந்த பலிபீடமும் இருப்பதை பார்க்கும் போது, இப்பகுதியில் கண்டிப்பாக சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். முதல் நடுகல்லில், போர் வீரர்கள் சண்டையிடுவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. நடுவில் நின்று போரிடும் வீரனின் உருவமைப்பும், வாள் பிடித்து நிற்கும் நிலையை பார்க்கும் போது, இவ்வீரன் ஒரு குறுநில மன்னன் போல் தெரிகிறது.

இந்த வீரன், வலது கையில் பெரிய அளவிலான வாளை மேல் நோக்கி பிடித்த படியும், இடது கையால் தன்னை நோக்கி வரும் குதிரை வீரனை தடுப்பது போலவும் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கழுத்து, கைகளில் நிறைய ஆபரணங்கள் உள்ளன. இடையில் பெரிய குத்துவாள் உள்ளது. வீரனின் இடதுபுறத்தில், குதிரை மீது அமர்ந்தபடி வீரன் வேல் கொண்டு தாக்குவது போல சிற்பம் உள்ளது. நடுவில் இருக்கும் வீரனின் கால்பகுதியில், ஒரு வீரன் இறந்து கிடப்பதை போலவும், பின் புறத்திலும் சில வீரர்கள் நிற்பதை போலவும் காட்சிகள் உள்ளன.

அதனால் நடுவில் உள்ள வீரன், பலமுனையில் இருந்து தாக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும். அல்லது முதல் வீரனை கொன்று விட்டு, குதிரை வீரனோடு சண்டையிடும் போது இறந்திருக்க வேண்டும். இது சொர்க்க வகை நடுகல். இரண்டாவது சொர்க்க வகை நடுகல்லில், நடுவில் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளது. வேல் கொண்டு தாக்க வரும் போர் வீரனை, கேடயம் மூலம் தடுப்பது போல் சிற்பம் உள்ளது. நடுகற்கள் கிடைத்துள்ள இடத்தின் அருகே, 17ம் நுாற்றாண்டில் திப்புவின் தந்தை ஐதர் அலி கட்டி கொடுத்த ஏரி உள்ளது. இதனால், இந்த இடத்தில் போர் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar