ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் திருஆனி ஸ்வாதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2017 10:06
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, 11 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 8 மணிக்கு, பெரியாழ்வார் சன்னிதியில் கொடியேற்றம் நடக்க உள்ளது. அதனைத்தொடர்ந்து பெரியாழ்வார் தினமும் மண்டபம் எழுந்தருளல், வீதியுலா நடக்கவுள்ளன. 5ம் திருநாளான ஜூன் 26ல் கருடசேவை, 9ம் திருநாளான ஜூலை 2 அன்று காலை 6 மணிக்கு பெரியாழ்வார் செப்புத்தேரோட்டமும் நடக்கிறது. 11ம் திருநாளான ஜூலை 4 அன்று பெரியாழ்வார், பெரியபெருமாள் எழுந்தருளல், வேதபிரான் பட்டர் புராணம் வாசித்தல் நடக்க உள்ளன. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.