பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
11:06
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வரும்பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, மூலம், 26.46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று முன்தினம் காலை, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் விஜயன் முன்னிலையில் எண்ணப்பட்டது. 11 உண்டியல்களில் ரொக்கம், 26 லட்சத்து, 46 ஆயிரத்து, 18 ரூபாயும்; தங்கம், 132 கிராம்; வெள்ளி, 231 கிராம் காணிக்கையாக கிடைத்தன.இந்த பணியில், 40 பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், 40 பேர் கலந்து கொண்டனர்.பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் முடிந்த பின், உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். கடந்த வாரம் திருவிழா முடிந்தது. நேற்று முன்தினம், கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.