பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
11:06
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் அமைந்து உள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை உற்சவர் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நாட்களில், தினமும் காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு பத்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதன்பின், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். ஆனி பிரம்மோற்சவ திருவிழா, 27ல், விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைகிறது.