சபரிமலை: சபரிமலையில் நாளை நடைபெறும் தங்கக்கொடிமர பிரதிஷ்டைக்கு முன்னோடியாக நேற்று சன்னிதானத்தில் சுக்ருத ஹோமம் நடந்தது. கொடி மரத்தை சுற்றி அமைக்கப்படும் தங்க தகடுகள் நேற்று சன்னிதானம் வந்தது. சபரிமலையில் புதிய தங்கக்கொடிமரம் அமைக்கும்பணி நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கு முன்னோடி பூஜைகள் தற்போது சபரிமலையில் நடந்து வருகிறது. கடந்த 21-ம் தேதி மிருத்யுஞ்சய ஹோமம், 22-ம் தேதி அற்புதசாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்று சுக்ர்த ஹோமம் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடந்தது. நாளை தத்துவ ஹோமம் நடக்கிறது. கொடிமரத்தை சுற்றி அமைக்கப்படும் தங்கத்தகடுகள் நேற்று சன்னிதானம் கொண்டு வரப்பட்டது.ஸ்ரீகோயிலை வலம் வந்த பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடி மரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. நாளை காலை 11:00 மணிக்கு புதிய தங்கக்கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.கொடி மரப்பணிகள் காரணமாக பங்குனி மாதம் நடைபெற வேண்டிய திருவிழா 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெறுகிறது.