பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
12:06
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமாவாசையை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார். மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பலவகை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட லேகியம், பக்தர்களுக்கு மகா பிரசாதமாக வழங்கப்பட்டது. மதியம் 12:30 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.