ஆனைமலை ;ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசை சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள்வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். அமாவாசை நாளான நேற்று, மதுரை, பழநி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், உள்ளூர் பக்தர்களும் காலை முதல் கோவில் வளாகத்தில் திரண்டனர். கோவிலில் அம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வரிசையில் நின்று அம்மனை வழிபட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பக்தர்கள் வசதிக்காக, பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.