திருத்தணி : ஆனி மாத அமாவசையை ஒட்டி, அம்மன் கோவில்களில், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. நேற்று, ஆனி மாத அமாவசையை ஒட்டி, இங்குள்ள மூலவருக்கு பால் அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இதே போல், திருத்தணி நகரில் உள்ள, படவேட்டம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட பல கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.