பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
01:06
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற, கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்படுகிறது. அதன்படி அறநிலையத்துறை உதவி ஆணையர், முருகையா, ஆய்வாளர் பாலசுந்தரி உள்ளிட்ட அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், நான்கு உண்டியல்களும், நேற்று திறந்து எண்ணப்பட்டன. பணம், சில்லரை காசுகள் சேர்த்து, 2.42 லட்சம் ரூபாய், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்து. இதில்லாமல், 16.5 கிராம் தங்க நகை, 89.900 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. உண்டியல்கள் எண்ணும் பணியில், அறநிலையத்துறை ஊழியர்கள், பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.