கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குட ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, மத்திப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று லாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குட ஊர்வலமாக மத்திப்பட்டி கோவிலுக்கு சென்றனர். இதில், மத்திப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.