காரைக்கால் மாங்கனி திருவிழாவில் பயன்படுத்தும் பொம்மைகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 12:06
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது.இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.மேலும் இவ்வாண்டு வரும் 6ம்தேதி மாப்பிள்ளை அழைப்பு,மறுநாள் 7ம் தேதி காரைக்கால் அம்மையார்,பரமதத்தர் திருகல்யாணம்,8ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது.பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும்.பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும்.30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பி விடப்படும்.சாலையின் இருபக்கங்கிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணி வேவகமாக நடத்து வருகிறது.அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.