திருநகர்: திருநகர் பி.ஆர்.சி., காலனி சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், நந்தி, கால பைரவர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை , பாலமுருகன், அய்யப்பன், ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்காக ஜூன் 23ல் துவங்கிய யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது.