ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பண்டிகையொட்டி கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் காலை, புத்தாடை அணிந்து ஊர்வலமாகச் சென்று, அருகில் உள்ள பள்ளி வாசல்களில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். பின்னர், முதியோர்களிடம் ஆசி பெற்றனர்.தொடர்ந்து உற்றார் உறவினர்களுடன் அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்தனர்.